tamilnadu

img

11 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது

இராமநாதபுரம்,ஆக.8- கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று இராமே சுவரத்தை சேர்ந்த ஏழு விசைப்படகு மீனவ ர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த தாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். ஜூலை  24 ஆம் தேதி புதுக்கோட்டை பகுதியை  சேர்ந்த 4 விசைப்படகு மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த இரண்டு வழக்குகளையும் வெள்ளி யன்று விசாரித்த மன்னார் மற்றும் ஊர்காவ ல்துறை நீதிமன்றங்கள் 11 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.